ராஞ்சி: ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யில், இந்திய வீரர் புஜாரா விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி ஒரு பக்கம் போராடினாலும் மறுபக்கம் அவர் இரட்டை சதம் விளாசி இந்தியாவை முன்னிலைப் பெறச் செய்துள்ளார். நேற்றைய நான்காம் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 603 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது இந்திய அணி. நேற்றைய ஆட்ட நேர முடிவில் வார்னர், லயன் விக்கெட்டுகளை இழந்து 23 ஓட்டங்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. 6 விக்கெட்டுகள் இழப்புடன் நேற்றைய ஆட்டத்தைத் தொடங்கியது இந்தியா. கடைசியில் புஜாரா 525 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் 202 ஓட்டங்கள் எடுத்து லயன் பந்தில் மேக்ஸ்வெலிடம் 'கேட்ச்' கொடுத்து வெளியேறினார். ரித்திமான் சாஹா 233 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 117 ஓட்டங்கள் எடுத்து ஓகீஃபை பந்தில் மேக்ஸ்வெலிடம் 'கேட்ச்' கொடுத்து ஆட்டமிழந்தார். புஜாராவும் சாகாவும் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 229 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
ஓட்டங்களைக் குவிக்க ஓடும் இந்திய வீரர்கள் ரித்திமான் சாகா, புஜாரா. படம்: ராய்ட்டர்ஸ்