வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி- களைத் துடைத்தொழிக்கும் வகை- யில் அமெரிக்க ராணுவத்தின் தலைமையிலான கூட்டணி நாடு- கள் நேற்று ஒன்று திரண்டன. அதிபர் டோனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு நவம்பரில் பதவி- யேற்றதற்குப் பின்பு பயங்கரவாதத்- திற்கு எதிராக நடத்தப்படும் முதல் அனைத்துலக நாடுகளின் கூட்டம் இது. ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதி- ராக போரிடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்போவதாக முன்னதாக அவர் சூளுரைத் திருந் தார். அதன்- படி கடந்த ஜன வரியில் அந்தத் தீவிரவாதக் குழுவை செயலிழக்கச் செய்வதற் கான திட்டங்களைத் தீட்டும்படி பெண்டகனை அவர் கேட்டுக்கொண்டார். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாதி களைத் துடைத்தொழிக்கும் திட்டம் பற்றி அதிபர் டிரம்பு முக்கிய அறிவிப்புகளை விடுப் பார் என்று நட்பு நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள- தாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பு, ஐஎஸ் தீவிரவாதிகளைத் துடைத்தொழிக்கும் திட்டத்தை வகுக்குமாறு ஜனவரி 28ஆம் தேதி அமெரிக்கப் பாதுகாப்புத்துறைக்கு அளித்த ஆணைக் கடிதத்தில் கையெழுத்திட்டார். படம்: ராய்ட்டர்ஸ்