குடிபோதையில் சுயநினைவு இழந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக 40 வயது ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வரு கிறது. பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு 22 வயது. இந்தக் குற்றச்செயல் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதியன்று நிகழ்ந்ததாகக் கூறப் படுகிறது. ஸ`க் இரவு விடுதியில் மதுபானம் அருந்தி போதையில் இருந்த அந்தப் பெண்ணை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பத்திரமாகச் சேர்க்கப் போவதாக ஓங் சூன் ஹெங் அங்கிருந்த நண்பர்களிடம் கூறிய தாக அறியப்படுகிறது.
குடிபோதையில் மயங்கிய அந்தப் பெண்ணும் ஓங்கும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்ற காரணத்தினால் யாரும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அதிகாலை 4 மணி அளவில் மயக்கமுற்ற அந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு இரவு விடுதி யைவிட்டு ஓங் வெளியேறுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பெண்ணைத் தமது காரின் பின் இருக்கையில் படுக்க வைத்து அங்கிருந்து கிளம்பினார் ஓங். அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் செல்வதற்குப் பதிலாக காரைத் தமது வீட்டுக்கு ஓட்டிச் சென்றார் ஓங். அவரது வீட்டை அடைந்ததும் அப்பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப் படுகிறது.