வியட்னாமின் ஹனோய் நகரில் நேற்று நடந்த தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டனில் சிங்கப்பூரின் லோ கியன் இயூ வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
ஒற்றையர் ஆடவர் இறுதிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த குன்லாவட் விடிட்சார்ன் 21-13, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
தென்கிழக்கு ஆசிய விளையாட்டு 2019ல் நடந்தபோது மலேசியாவின் பேட்மிண்டன் வீரர் லீ ஸி ஜியாவுடன் மோதி லோ வெள்ளிப் பதக்கத்தைத்தான் பெற்றார்.
இப்போதும் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று இருக்கிறார்.
சிங்கப்பூரில் 2015ல் நடந்த போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
பேட்மிண்டன் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடந்தது. அந்தப் பரபரப்பான ஆட்டத்தில் வியட்னாமின் நுயன் தியன் மின் என்பவரை 21-15, 10-21, 23-21 என மூன்று செட்டு களில் தோல்வியின் விளிம்பு வரை சென்று வெற்றிகண்டார் லோ.
அரையிறுதி ஆட்டத்தில் தொடக்கம் முதலே லோ போட்டி யில் பேராதிக்கம் செலுத்தி வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.