இலங்கை செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
புதுடெல்லி: வரலாறு காணாத பொருளியல் நெருக்கடியில் சிக்கித் தவித்தாலும் இலங்கையில் கிரிக்கெட் போட்டிகள் தங்குதடையின்றித் தொடருகின்றன. அங்கு அடுத்த மாதம் மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளும் டி20 போட்டி களும் நடைபெற உள்ளன. இதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஜூன் 18ஆம் தேதி கொழும்பு செல்கிறது. ஜூன் 23ஆம் தேதி ஒருநாள் போட்டித் தொடர் தொடங்கு கிறது. ஜூலை 2 முதல் ஜூலை 7 வரை டி20 தொடர் நடக்கிறது. ஜூலை 28ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங் கும் காமன்வெல்த் விளையாட்டுகளில் திறமையை வெளிப் படுத்த ஒத்திகை எடுக்கும் நோக்கில் இலங்கையில் நடை பெறும் போட்டிகளை இந்திய மகளிர் அணி நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஹர்பஜன் சிங்கை முந்திய பும்ரா
மும்பை: ஐபிஎல் 2022 தொடரில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ெடல்லி அணியை மும்பை அணி வென்றது. நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா, முக்கியமான மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்தது மும்பை இந்தியன்ஸ் அணி யின் வெற்றிக்கு உதவியது. மும்பை அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் 2ஆம் இடத்திலிருந்த ஹர்பஜன் சிங்கைப் பின்னுக்குத் தள்ளி பும்ரா அந்த இடத்தைக் கைப்பற்றினார். முதலிடத்தில் மலிங்கா நீடிக்கிறார்.