ரவீணா சிவகுருநாதன்
பேசாத எந்தமொழியும் அழிந்து விடும். தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என நினைப்பவர்கள் அந்த மொழியைப் பேச வேண்டும். எந்த மொழியுமே பயன்பாட்டில் இருந்தால் அது புழங்கும் மொழியாக இருக்கும், மேலும் மேலும் வளம் பெறும் என்று பெற்றோர், ஆசிரியர்களிடம் வலி யுறுத்தினார் தன்முனைப்புப் பேச்சாளர் முனைவர் எஸ்.எஸ். கேப்ரியல் பெற்றோர்=பிள்ளை உறவு, ஆசிரியர்=மாணவர் உறவு, ஆசிரியர்=பெற்றோர் உறவு போன்றவற்றை மையமாகக் கொண்டு இந்த ஆண்டின் தமிழ வேள் நினைவு சொற்பொழி வை சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் சிறப்புப் பேச் சாளராக உரையாற்றிய முனைவர் எஸ்.எஸ்.கேப்ரியல், ஒரு மொழி வாழ்வதற்கும் வளர்ச்சி காண்பதற்கும் அந்த மொழியைப் பேசுவது எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்கூறினார்.