அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசி நேற்று முன்
தினம் தைவானுக்கு அதிகார
பூர்வப் பயணம் மேற்கொண்டதற்கு எதிர்ப்பு காட்டும் வகையில் தைவானைச் சுற்றிவளைத்து, இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய போர்ப் பயிற்சியை சீனா நேற்று நடத்தியது.
தைவானைச் சுற்றியுள்ள கடற்பகுதியை நோக்கி சீனா கிட்டத்தட்ட 11 ஏவுகணைகளைப் பாய்ச்சியது. இதற்கு முன்னதாக 1996ஆம் ஆண்டில் தைவானைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் சீனா ஏவுகணைகளைப் பாய்ச்சியது
தைவானைத் தனது ஒரு பகுதி யாகக் சீனா கருதுகிறது. எனவே, அதை ஒரு தனி நாடாகக் கருதி அமெரிக்க பேராளர் ஒருவர் பயணம் மேற்கொண்டிருப்பது சீனாவின் இறையாண்மையில் தலையிடுவதற்குச் சமம் என்று சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று தொடங்கிய போர்ப் பயிற்சிகள் நாளை மறுநாள் வரை நீடிக்கும் என்று சீனா அறிவித்துள்ளது. தைவானைச் சுற்றியுள்ள கடற்பகுதியிலும் வான்வெளியிலும் உண்மையான தோட்டாக்கள், ஏவுகணைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி போர்ப் பயிற்சிகள் நடைபெறும் என்று சீனா கூறியது.
தைவானுக்கு அருகில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தளங்களிலிருந்து ஏவுகணைகள் பாய்ச்சப்படுவதை ஏஎஃப்பி செய்தி யாளர்கள் கண்டனர்.
சீனா நடத்தும் இந்தப் போர்ப் பயிற்சி ஐநா விதிமுறைகளை மீறுவதாக தைவானிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே, சீனா பாய்ச்சிய சில ஏவுகணைகள் முதல்முறையாக ஜப்பானின் பிரத்தியேகப் பொருளியல் மண்டலத்தில் விழுந்திருக்கக்கூடும் என்று ஜப்பானிய தற்காப்பு அமைச்சு கூறியது.
திருவாட்டி பெலோசியின் தைவான் பயணத்தைக் காரணமாகக் காட்டி தைவானிய கடற்
பகுதியில் மூர்க்கத்தனமான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சீனா
சாடியது.