ஊர்ந்து வந்து நின்று...
திறந்த கதவுகள் வழியாக
இறங்குபவர்களை இறக்கிவிட்டு...
ஏறுபவர்களை ஏற்றிக்கொண்டு...
அவரவர் தேவைகள் முடிந்து...
அவசரமாய் அந்நியமாய்
செல்பவர்களை..
மௌனமாகப் பார்த்துவிட்டு - தன்
கடமையை தொடர -
மனிதர்களை கடந்து செல்லும்
மின்சார ரயிலும்
ஒருவகையில்
மனித வாழ்வின் தத்துவமே!
- தென்மாப்பட்டு அ. ராஜா