கப்பல்களில் ஏற்றப்பட்ட ெஷல் எரிவாயு எண்ணெய்யின் அளவை முறையற்ற அளவில் அறிவித்து தில்லுமுல்லு செய்வதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக சோதனை அளவீட்டாளர் ஒருவருக்கு 12,000 அமெரிக்க டாலர் (S$16,134) லஞ்சமாகத் தரப்பட்டது.
குமணன் ரெத்னகுமாரன், 40, எனப்படும் அந்த அளவீட்டாளரின் உதவியால் ஷெல் எரிவாயு எண்ணெய்யின் அளவில் இரு கையாடல் சம்பவங்கள் நடைபெற்றன.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த மோசடியின் மதிப்பு 634,000 அமெரிக்க டாலர். அது அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை.
'சிசிஐசி சிங்கப்பூர்' என்னும் சரக்கு சோதனைச் சேவை நிறு
வனத்தில் அப்போது பணியாற்றிய குமணன் ரெத்னகுமாரன் லஞ்சம் பெற்றதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நேற்று அவருக்கு 15 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. லஞ்சத் தொகையைத் திருப்பித் தரும் விதமாக $16,134 அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது.