சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆணையர் பொறுப்பில் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் நீக்கப்பட்டுள்ளார். ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியிடம் இருந்து தமிழக முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனப் பரிந்துரைத்து மத்திய வருமான வரித்துறை கிரிஜா வைத்தியநாதனுக்கு கடிதம் அனுப்பியது. லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் ஆணையராகவும் பொறுப்பு வகித்த கிரிஜா வைத்தியநாதன் லஞ்ச விவகாரம் குறித்து விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அப்பொறுப்பில் இருந்து அவர் விலக்கப்பட்டுள் ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை புதிய ஆணையராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந் நடவடிக்கை அரசு, அரசியல் தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் பொறுப்பில் இருந்து கிரிஜா நீக்கம்
10 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 May 2017 07:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!