பாத்தும் தானி: கணவர் தமது காதலியுடன் மெர்சிடிஸ் காரில் செ ன் று கொ ண் டி ரு ந் த தை க் கண்டுபிடித்த பெண், கோபம் அடைந்து தாம் ஓட்டிச் சென்ற புத்தம் புதிய காரை அந்த மெர்சிடிஸ் மீது மோதினார். இதன் விளைவாக அவ்வழி யாகச் சென்றுகொண்டிருந்த மேலும் மூன்று வாகனங்களும் சேதம் அடைந்தன. கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் மொத்தம் ஆறு பேர் காயமடைந்தனர். ஜிபிஎஸ் மூலம் தமது கணவரின் கார் இருக்கும் இடத்தைக் அப்பெண் கண்டு பிடித்தார். விபத்தின் காரணமாக அந்தச் சாலைப் பகுதியில் மோச மான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோபமடைந்த மனைவி கணவரின் மெர்சிடிஸ் கார் மீது மோதியதால் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படம்: தி நேஷன்/ஆசிய செய்திக் கட்டமைப்பு