சிங்கப்பூருக்கு நடந்து வந்த இந்தோனீசிய ஆடவர் கைது

துவாஸ் இரண்டாவது இணைப்பு வழியாக மார்ச் 23ஆம் தேதி நள்ளிரவில் சிங்கப்பூருக்கு நடந்து வந்த இந்தோனீசிய ஆடவர் கைது செய்யப்பட்டார். 

துவாஸ் சோதனைச்சாவடியில் துணைக் காவல்துறை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தியதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது. 

பிடிபட்டவரிடம் அடையாள, பயண ஆவணம் எதுவும் இல்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். குடிநுழைவுக் குற்றம் செய்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதை ஒட்டி இவர் கைதானார்.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைவது அல்லது வெளியேறுவதைத் தான் கடுமையாகக் கருதுவதாக ஆணையம் குறிப்பிட்டது.

குற்றம் புரிந்தோருக்கு $1,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று ஆணையம் கூறியது.

2022ல் குடிநுழைவுக் குற்றம் புரிந்த 414 பேர் கைதுசெய்யப்பட்டனர். 2021ல் இந்த எண்ணிக்கை 355ஆகப் பதிவானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!