மலேசியாவின் ஜோகூர் பாருவில் இருந்து சிங்கப்பூருக்குள் கள்ளத்தனமாக நீந்தி வந்ததாக பங்ளாதேஷ் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 3.00 மணிக்கு சிங்கப்பூர் கடலோரக் காவல்துறையினர் உட்லண்ட்ஸ் குடியுரிமை, சோதனைச் சாவடி ஆணையத்திடம் கரையோரமாக ஒருவர் சிங்கப்பூர் நோக்கி நடந்து வருவதாக அறிவித்ததையடுத்து அந்த ஆடவர் அடுத்த அரை மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அவர் சிங்கப்பூருக்குள் கள்ளத் தனமாக நீந்தி வர இருந்தது தெரிய வந்தது.
அவரிடம் மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடியுரிமை, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது. கள்ளத்தனமாக சிங்கப்பூருக்குள் நுழைய முயல்பவருக்கும் சிங்கப்பூரில் அனுமதியின்றி தங்கியிருப்பவருக்கும் குறைந்தது ஆறு மாதச் சிறைத்தண்டனையும் 3 பிரம்படித் தண்டனையும் கிடைக் கலாம். சட்ட விரோதக் குடிநுழைவுக்கு 6 மாதச் °சிறைத் தண்டனையும் $2,000 அபராதமும் விதிக்கப்படலாம்.