சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 'எகானமி' வகுப்பில் முன் பதிவு செய்த வாடிக்கையாளர்கள் 'பிரீமியம் எகானமி' வகுப்புக்கு மாறிக்கொள்வதற்கான ஏலத்தில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்படுவர். 'மைஎஸ்கியூஅப்கிரேட்' எனும் இந்தப் புதிய திட்டம் படிப்படியாக அதன் கட்டமைப்பில் அறிமுகப்படுத்தப்படும் என 'கிரிஸ்ஃப்ளையர்' திட்டத்தின் அங்கத்தினருக்கு அந்த நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பி உள்ளது. இத்தகைய திட்டம் அண்மைக் காலங்களில் பல விமான நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இந்த ஏலத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக வால் ஸ்திரீட் சஞ்சிகை சென்ற ஜனவரியில் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த ஏலத் திட்டத்துக்கு வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதம் விமான நிறுவனத்துக்கு ஏற்ப வேறுபடுகிறது. சில நிறுவனங்கள் தனியாகப் பயணம் செய்பவர்களையும் வேறு சில நிறுவனங்கள் அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்வர்களையும் தேர்ந்தெடுக் கின்றன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்தத் திட்டத்துக்குத் தேர்ந்தெடுப்பவர்களை பயண தேதிக்கு ஏழு நாட்களுக்கு முன்பாகத் தொடர்புகொள்ளும். பயணத் துக்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு ஏலத்தின் முடிவு தெரிவிக்கப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.