பேருந்து மோதி பாதசாரி மரணம்

தோ பாயோ பேருந்துச் சந்திப்பு நிலையத்துக்கு வெளியே நேற்று காலையில் எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து மோதி முதியவர் ஒருவர் மாண்டார். சம்பவம் தொடர்பாக 36 வயது பஸ் ஒட்டுநர் கைது செய் யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து காலை 6.15 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. விபத்து நேர்ந்த இடத்திலேயே முதியவர் மாண்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

பஸ் எண் 235, பாதசாரியை மோதியதால் விபத்து ஏற்பட்டி ருப்பதாகவும் பேருந்துச் சந்திப்பு நிலையத்துக்கு வெளியே இது நடந்திருப்பதால் அது மற்ற பேருந்துகளுக்கு இடைஞ்சலாக உள்ளது என்று கூறி பேருந்து சேவை 238ன் ஓட்டுநர் பயணி களைக் கீழே இறங்குமாறு கேட் டுக்கொண்டதாகவும் பேருந்தில் பயணம் செய்த திரு லாம் கூன் ஹெங் கூறினார். "தோ பாயோ பேருந்துச் சந் திப்பு நிலையத்துக்கு வெளியே விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. நீலநிறக் கூடாரம் தென்பட்டது. மாண்டோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்," என்ற வாசகத்துடன் விபத்து தொடர் பான புகைப்படத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் திரு கெடி செங் பகிர்ந்து கொண்டார். "இந்தச் சம்பவத்தால் நாங் கள் மிகுந்த கவலை அடைந்துள் ளோம். மாண்டவரின் குடும்பத் திற்கு உதவ முற்பட்டுள்ளோம்," என்றார் எஸ்பிஎஸ் டிரான்சிட் டின் தகவல் தொடர்புப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் டேமி டான்.

தோ பாயோ பேருந்துச் சந்திப்பு நிலையத்துக்கு வெளியே சாலையைக் கடக்க முயன்ற ஆடவர் ஒருவரை எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து மோதித் தள்ளியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!