நாட்டின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் இளையர்களை ஈடுபடுத்தும் நோக்கத்துடன் இளையர் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை. "இந்த மாநாட்டில் இளையர்களின் சிந்தனைகளையும் அவர் களது கருத்துகளையும் தொகுத்து, சமூகத் தலைவர்களுக்கும் அரசியல் தலைவர் களுக்கும் கொடுக்கவுள்ளோம். இதன்மூலம் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் ஏற்படுத்த விழைகிறோம். இதில் கருத்துகளைக் கூறுவதுடன் செயலிலும் இளையர்களை ஈடுபடச் செய்வது எங்களது இலக்கு," என்று குறிப்பிட்டார் சிங்கப்பூர் இளையர் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு வி.அருள் ஓஸ்வின்.
மாநாட்டு ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் 24 பேரும் கடந்த எட்டு மாதங்களாகப் பலரைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று மாநாட்டை ஒருங்கிணைத்துள் ளனர். 'இன்றைய இளையர்களின் கையச்சு; நாளைய தலைவர் களின் பாதச்சுவடு' என்ற தலைப்பில் நாளையும் நாளை மறுநாளும் அடித்தள அமைப்புகள் மன்றத்தில் நடைபெற உள்ளது. இரண்டு நாளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் மாநாட்டில் தலைமைத்துவம், கலை மற்றும் கலாசாரம், கல்வி, சமூகசேவை ஆகிய நான்கு தலைப்புகளில் 20 குழுக்களாக இளையர்கள் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.