நாட்டு வளர்ச்சியில் இளையர்களை ஈடுபடுத்தும் சிங்கப்பூர் இளையர் மாநாடு

நாட்டின் வளர்ச்­சி­யி­லும் மேம்பாட்­டி­லும் இளை­யர்­களை ஈடு­படுத்­தும் நோக்­கத்­து­டன் இளையர் மாநாட்டை ஏற்பாடு செய்­துள்­ளது சிங்கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கத் தமிழ்ப் பேரவை. "இந்த மாநாட்­டில் இளை­யர்­களின் சிந்தனை­களை­யும் அவர்­ க­ளது கருத்­து­களை­யும் தொகுத்து, சமூகத் தலை­வர்­களுக்­கும் அர­சி­யல் தலை­வர்­ களுக்­கும் கொடுக்­க­வுள்­ளோம். இதன்­மூ­லம் வளர்ச்­சியை­யும் மேம்பாட்டை­யும் ஏற்­படுத்த விழை­கி­றோம். இதில் கருத்­து­களைக் கூறு­வ­து­டன் செய­லி­லும் இளை­யர்­களை ஈடு­ப­டச் செய்வது எங்க­ளது இலக்கு," என்று குறிப்­பிட்­டார் சிங்கப்­பூர் இளையர் மாநாட்டு ஏற்­பாட்­டுக் ­கு­ழுத் தலைவர் திரு வி.அருள் ஓஸ்வின்.

மாநாட்டு ஏற்­பாட்­டுக் குழு உறுப்­பி­னர்­கள் 24 பேரும் கடந்த எட்டு மாதங்க­ளா­கப் பலரைச் சந்­தித்து ஆலோ­சனை­களைப் பெற்று மாநாட்டை ஒருங்­கிணைத்­துள்­ ­ள­னர். 'இன்றைய இளை­யர்­களின் கையச்சு; நாளைய தலை­வர்­ களின் பாதச்­சு­வடு' என்ற தலைப்­பில் நாளையும் நாளை மறுநாளும் அடித்­தள அமைப்­பு­கள் மன்றத்­தில் நடைபெற உள்ளது. இரண்டு நாளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடை­பெ­றும் மாநாட்­டில் தலைமைத்­­­து­­­வம், கலை மற்றும் கலா­­­சா­­­ரம், கல்வி, சமூ­க­சேவை ஆகிய நான்கு தலைப்­பு­களில் 20 குழுக்­க­ளாக இளை­யர்­கள் கலந்­துரை­யா­டல்­களை நடத்­த­வுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!