'கம்யூனிட்டி இன் புளூம்' (Community In Bloom) திட் டத்தின்கீழ்த் தோட்டக்கலையில் ஆர்வமுடையவர்கள் திருவாட்டிப் பூங்கோதையின் வழிகாட்டுத லோடு தங்கள் வட்டாரங்களில் சமூக தோட்டங்களை உருவாக்கி நகர்ப் புற பசுமைக்குப் பங்களிக் கிறார்கள். அவருடைய வழிகாட்டுதலில் பயனடைந்த ஒருவர் திரு சங்கர லிங்கம் ராமசாமி, 56 (படம்), கடந்த ஐந்து ஆண்டுகளாக தோட்டக்கலையில் ஈடுபட்டு வரு கிறார். தோட்டக்கலையில் ஏற்பட்ட ஆர்வத்தினால் ரிவர்வேல் நீதிமன்றம் வசிப்போர் குழுவில் தோட்டக்கலைச் சங்கத்தைத் தொடங்கி வைத்தார்.
"புதிய உத்திகளையும் பய னுள்ள குறிப்புகளையும் திரு வாட்டிப் பூங்கோதை அளிப்பதோடு செங்குத்தான தோட்டங்கள், வீட்டுக்குள் தோட்டங்கள் ஆகிய வற்றை எவ்வாறு அமைப்பது என்பதை அவர் கற்றுக்கொடுத் தார். அவருடைய உந்துதலில் பலவகையான செடிகளை வளர்க் கலாம் என்ற நம்பிக்கை பிறந்து உள்ளது," என்று கூறினார் அவர். 'கம்யூனிட்டி இன் புளூம்' திட்டத்தில் பாலர்பள்ளி மாணவர் கள் முதல் முதியோர்வரை வயது வரம்பின்றி ஈடுபட்டுச் சிங்கப்பூர் பூங்கா விழாவைë/„ட்டி கடந்த மாதம் நடைபெற்ற போட்டிகளுக் காக சமூகத் தோட்டங்களை அமைத்து விருதுகள் வென்றனர்.