உலக 'டவுன் சிண்ட்ரோம்' தினத்தை முன்னிட்டு நேற்றுக் காலை 8 மணிக்கெல்லாம் டோபி காட் கிரீன் இடத்தில் இருந்து சுமார் 620 பேர் டவுன் சிண்ட்ரோம் குறைபாடு பற்றிய விழிப்புணர்வு நடையில் பங்கேற்றனர். சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நடையைத் தொடங்கி வைக்க, டவுன் சிண்ட்ரோம் குறைபாடு உள்ள 150 பேருடன் அவர்களின் குடும்பத்தினர், சங் கத்தின் ஆதரவாளர்கள் ஆகி யோர் நாள் முழுதும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல் அங்கமான 2.2 கிலோ மீட்டர் நடையில் கலந்து கொண்டனர்.
டவுன் சிண்ட்ரோம் குறைபாடு உள்ளவர்களுடன் சிங்கப்பூர் டவுன் சிண்ட்ரோம் சங்கத்தின் ஆதரவாளர்கள் நேற்றைய விழிப்புணர்வு நடையில் பங்கேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்