தீவு விரைவுச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரத்தில் ஒரு காட்டுப் பன்றி காரணமாக சாலை விபத்து நிகழ்ந்தது. புக்கிட் தீமா விரைவுச்சாலை புறவழிக்கு அப்பால் மாலை சுமார் 5.50 மணிக்குத் தீவு விரைவுச்சாலையில் இரண்டு வாகனங்கள் விபத்துக் குள்ளாகிவிட்டன. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் இல்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. இதனிடையே, இந்த விபத்து நிகழ்ந்த சாலை வழியாகச் சென்ற அலெக்ஸ் லோ, 39, என்ற ஆசிரியர், ஒரு காட்டுப் பன்றி வாயில் ரத்தம் கொட்டிய நிலையில் தரையில் கிடந்ததைத் தான் பார்த்ததாகத் தெரிவித்தார்.
தீவு விரைவுச்சாலையில் டிசம்பர் 31ஆம் தேதி காட்டுப் பன்றி காரணமாக சாலை விபத்து நிகழ்ந்தது. படம்: அலெக்ஸ் லோ/ஃபேஸ்புக்