சாலையில் சிவப்பு விளக்கை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்ற டாக்சி ஓட்டுநர் ஒருவர், அப்போது சாலையைக் கடந்து கொண்டிருந்த பாதசாரி மீது மோதி மரணம் விளைவித்ததார். கம்பாஸ் அவென்யூவில், உட்லண்ட்ஸ் அவென்யூ 8ஐ நோக்கி, 2017 ஏப்ரல் 9ஆம் தேதி அப்துல் சுக்கூர் ஜூமாத், 50, என்பவர் டாக்சியை ஓட்டிச்சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு சாலை சந்திப்பில் சிவப்பு விளக்கு எரிய இருந்தது. அப்போது பச்சை விளக்கு அணைந்து அணைந்து எரிந்துகொண்டிருந்தது. அந்த நேரத்தில் லி யோக், 38, என்பவர் சாலையைக் கடந்துகொண்டிருந்தார்.
சுக்கூர், சிவப்பு விளக்கை மீறி 79 கி.மீ. வேகத்தில் டாக்சியை ஓட்டிக்கொண்டு சென்றபோது அவரால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வாகனம் லியின் மீது மோதிவிட்டது. இந்தக் குற்றத்திற்காக சுக்கூருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆறாண்டு காலம் அவருடைய வாகன ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்பட்டது. சுக்கூர், 2005 முதல் 2016 வரை சட்டவிரோதமாக வாகனத்தை ஓட்டிச் சென்றது தொடர்பான ஐந்து குற்றச் செயல்களைச் செய்தவர்.