சாலை விபத்தில் பாதசாரி பலி: டாக்சி ஓட்டுநருக்கு 5 மாதம் சிறை

சாலையில் சிவப்பு விளக்கை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்ற டாக்சி ஓட்டுநர் ஒருவர், அப்போது சாலையைக் கடந்து கொண்டிருந்த பாதசாரி மீது மோதி மரணம் விளைவித்ததார். கம்பாஸ் அவென்யூவில், உட்லண்ட்ஸ் அவென்யூ 8ஐ நோக்கி, 2017 ஏப்ரல் 9ஆம் தேதி அப்துல் சுக்கூர் ஜூமாத், 50, என்பவர் டாக்சியை ஓட்டிச்சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு சாலை சந்திப்பில் சிவப்பு விளக்கு எரிய இருந்தது. அப்போது பச்சை விளக்கு அணைந்து அணைந்து எரிந்துகொண்டிருந்தது. அந்த நேரத்தில் லி யோக், 38, என்பவர் சாலையைக் கடந்துகொண்டிருந்தார்.

சுக்கூர், சிவப்பு விளக்கை மீறி 79 கி.மீ. வேகத்தில் டாக்சியை ஓட்டிக்கொண்டு சென்றபோது அவரால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வாகனம் லியின் மீது மோதிவிட்டது. இந்தக் குற்றத்திற்காக சுக்கூருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆறாண்டு காலம் அவருடைய வாகன ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்பட்டது. சுக்கூர், 2005 முதல் 2016 வரை சட்டவிரோதமாக வாகனத்தை ஓட்டிச் சென்றது தொடர்பான ஐந்து குற்றச் செயல்களைச் செய்தவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!