மின்னிலக்கத் தற்காப்பின் வலிமையில் கூடுதல் கவனம்

சிங்கப்பூர் அறிவார்ந்த தேசமாகத் திகழ முடியுமா முடியாதா என்பதும் குடிமக்கள் நல்ல வேலைகளையும் சேவைகளையும் பெறுவதும் அதன் மின்னிலக்கத் தற்காப்பின் வலிமையைப் பொறுத்துள்ளது. தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் இதனை இன்று கூறினார்.

இணைய ஊடுருவல் சம்பவங்கள், மோசடிகள், போலி செய்திகளின் பரவல் ஆகிய மிரட்டல்களை சிங்கப்பூர் எதிர்நோக்குவதாகத் திரு ஈஸ்வரன் தெரிவித்தார். சிங்கப்பூரின் மின்னிலக்கத் தயார்நிலை வலுப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய திரு ஈஸ்வரன், இதன் மூலம் தொழில்நுட்பத்தின் அனுகூலங்கள் அனைவரையும் சென்றடைய முடியும் என்றும் சொன்னார்.

ஃபோர்ட் கென்னிங் கிரீனில் முழுமைத் தற்காப்பை நினைவுகூரும் நிகழ்ச்சி ஒன்றில் திரு ஈஸ்வரன் உரையாற்றினார். தற்காப்புக்கான மூத்த துணையமைச்சர் மாலிக்கி ஒஸ்மானுடன் அவர் மின்னிலக்கத் தற்காப்பு இயக்கத்திற்கான சின்னம் ஒன்றையும் "இணையத்தில் பாதுகாப்பாகவும் விழிப்பாகவும் பொறுப்பாகவும் இருங்கள்"( "Be Secure, Alert, and Responsible Online") என்ற வாசகத்தையும் வெளியிட்டார்.

முழுமைத் தற்காப்புக் கட்டமைப்பில் மின்னிலக்கத் தற்காப்பு சேர்க்கப்படலாம் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கடந்தாண்டு அக்டோபர் கோடிகாட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!