தீவெங்கிலுமுள்ள ஆப்பிள் கடைகளை வியாழக்கிழமை இரவு முதற்கொண்டே வாடிக்கையாளர்கள் புடைசூழக் காத்திருந்தனர். இன்று காலை எட்டு மணிக்கு ஆர்ச்சர்ட் ரோட்டின் ஆப்பிள் கடையின் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து மடை திறந்த வெள்ளம் போல் வாடிக்கையாளர்கள் நுழையத் தொடங்கினர்.
இவர்களது ஆர்வம் எல்லாம் ஆப்பிளின் அண்மை வெளியீட்டான ஐ-போன் 11 கைப்பேசி மீதுதான்.
ஆர்ச்சர்ட் ரோடு கடைக்குள் முதலில் நுழைந்தவர் 39 வயது ஜூலியன் சோ. 64 ஜிபி ஐ-போன் 11 ப்ரோவுக்கு ஏற்கெனவே முன்பதிவு செய்த அவர், அதனை இன்று பூரிப்புடன் வாங்கிக் கொண்டார்.
ஆறு அங்குல ஐ-போன் 11 (6.1-inch iPhone 11), 5.8 அங்குல 11 ப்ரோ (5.8-inch 11 Pro), 6.5 அங்குல 11 ப்ரோ மேக்ஸ் ஆகியவை புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஐ-போன் 11 தொடரில் உள்ளடங்குகின்றன.