ஆறு புதிய கிருமித் தொற்று சம்பவங்கள்

  1. கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட 19வது நபர் சிங்கப்பூரில் வசிக்கும் 28 வயது பெண். அவர் அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்க வில்லை. ஜாலான் புசாரில் எண் 24, கெவன் ரோட்டில் அமைந்துள்ள யோங் தாய் ஹாங் சீன பாரம்பரிய மருந்து கடையின் விற்பனை அதிகாரியாக அவர் பணியாற்றுகிறார். சீனாவிலிருந்து வந்த சுற்றுப் பயணிகளுக்குப் பொருட்களை விற்றவர் அவர். கடந்த புதன்கிழமை அவருக்கு தொண்டை வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. அதற்கு அடுத்த நாள் டான் டோக் செங் மருத்துவமனையில் அவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்-ரேயில் அவருக்கு நிமோனியாவுக்கான அறிகுறிகள் இல்லாததால் அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான காலகட்டத்தில் அவர் ஜாலான் புக்கிட் மேராவில் இருக்கும் அவரது வீட்டிலிருந்து எங்கும் செல்லவில்லை. நேற்று முன்தினம் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

  2. கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட 20வது நபர் சிங்கப்பூரில் வசிக்கும் 48 வயதுப் பெண். அவரும் அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. ஹவ்காங் ஸ்திரீட் 61ல் வசிக்கும் அவரும் யோங் தாய் ஹாங் கடையில் பணிபுரிந்தவர். கடந்த மாதம் 25ஆம் தேதி அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் அவர் தேசிய தொற்று நோய்கள் நிலையத்தில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

  3. சிங்கப்பூரில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட 21வது நபர் 44 வயதான இந்தோனீசியப் பெண்மணி. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 19வது நபரின் இல்லப் பணிப்பெண் இவர். இவரும் அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. ஜாலான் புக்கிட் மேராவிலுள்ள தமது முதலாளியுடன் அவரது வீட்டில் தங்கியிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும் அப்போதிருந்து அவர் வெளியில் எங்கும் செல்லவில்லை என்றும் கூறப்பட்டது. நேற்று முன்தினம் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  4. வூஹானிலிருந்து சிங்கப்பூருக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி ஸ்கூட் விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட சிங்கப்பூர் குடியிருப்பாளர் இருவருக்கும் கிருமித் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பாதிப்புக்குட்பட்ட 22வது, 23வது நபர்கள். அவர்கள் விமானத்தில் ஏறியபோது அவர்களுக்கு கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. சிங்கப்பூருக்கு வந்ததும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாதபோதும், அவர்களுக்கு கிருமித் தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதிசெய்யப்பட்டது. தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப் பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  5. கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்ட 24வது நபர் 32 வயதான சிங்கப்பூர் குடியிருப்பாளர். அவர் அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. ஆனால், கிருமித் தொற்று ஏற்பட்ட 19, 20வது நபர்கள் பணியாற்றிய யோங் தாய் ஹாங் கடைக்கு சுற்றுப் பயணிகளை அழைத்து வந்த பயண வழிகாட்டி அவர். நேற்று முன்தினம் தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்துக்குச் சென்றபோது அவருக்கு கிருமித் தொற்று அறிகுறிகள் ஏதுமில்லை என்று கூறப்பட்டது. ஆனால், அவர் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு கிருமித் தொற்று இருப்பது நேற்று பிற்பகலில் உறுதி செய்யப்பட்டது.

  6. கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட 35 வயது ஆடவரான வூஹான் குடியிருப்பாளர், சிகிச்சைக்குப் பிறகு கிருமித் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளார். அவருக்கு கிருமித் தொற்று இப்போது இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் நேற்று தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்திலிருந்து வீடு திரும்பினார்.
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!