நடிகர் விஜய் நடித்த தமிழ்த் திரைப்படமான 'தலைவா'வில் இடம்பெறும் 'தளபதி' எனத் தொடங்கும் பாடலின் மெட்டில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்!' எனும் தலைப்பிலான பாடல் காணொளி ஒன்று யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
"கடல் கடந்து வந்து சிங்கப்பூரின் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் நமது அன்பு சகோததர்களுக்கு இது ஒரு சமர்ப்பணம்.
(காணொளியை முழுமையாகக் காண முழுத்திரை பொத்தானை அழுத்தவும்)
"நீங்கள் தனியாக இல்லை. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள நாங்கள் இருக்கிறோம். நாம் இதிலிருந்து ஒன்றாக மீள்வோம்!
"இந்தக் காணொளி நம் சகோதரர்களை ஊக்குவிக்க சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் சிலரால் உருவாக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் யாரும் தனித்து இல்லை, நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதே இதன் நோக்கு," என்ற வரிகளுடன் இந்தப் பாடல் காணொளி, குணசேகர் வைத்தநடாசம் எனும் யூடியூப் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் அற்புதமான இசையில் உருவான இந்தப் பாடலின் வரிகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன என்று யூ-டியூப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.