நோய்ப்பரவலை முறியடிக்கும் அதிரடி திட்ட காலக்கட்டத்தின்போது லிட்டில் இந்தியா வட்டாரத்தில் அமைந்துள்ள மெர்லின் கோல்டுஸ்மித் நகைக்கடை வேறு வழியின்றி மூட வேண்டியிருந்தது. இருந்தபோதும் அதன் வர்த்தகம் இணையத்தின் மூலமாக ஓரளவு இயங்குவதாக அதன் இயக்குநர் ஜெனிஸ் லின் தெரிவித்திருக்கிறார்.
"எங்களது வர்த்தகத்தை முழுமையாக திறக்காமல் இருப்பதற்குப் பதிலாக எங்களது நிறுவனம் இணைய விற்பனை மீது கவனம் செலுத்துகிறது. பல்வேறு சலுகைகளின் மூலம் அரசாங்கம் எங்களுக்குக் கைகொடுத்து வந்தாலும் நாமும் நம் பங்கிற்கு வர்த்தகத்தையும் ஊழியரணியையும் கட்டிக்காக்கவேண்டும் என்ற இன்னமும் நம்புகிறோம்," என்று திருவாட்டி சின் கூறினார்.
இக்கடையின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் கடைக்கு நேரடியாகச் செல்வது வழக்கம் என்பதால் இந்தக் காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த விற்பனை 75 விழுக்காடு குறைந்துள்ளது. ஆயினும், இணைய வியாபாரத்தால் வருவாய் 50 வரை கூடியுள்ளது.
விசுவாசமான வாடிக்கையாளர்களாலும் சமூக ஊடக உத்திகளாலும் வர்த்தகம் தொடர்வதாக திருவாட்டி சின் கூறினார்.