இணையம் வழி விற்பனைக்கு பொருள், சேவை வரி செலுத்த பதிவு செய்யத் தவறியதாக கைபேசி விற்பனையாளர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
லசாடா, ஷாப்பீ, கெரோசல் ஆகிய இணையம் வழி விற்பனைத் தளங்களில் எட்வின் பங் சுங் ஜியே எட்மொபைல், மொ்ககி ஆகிய இரண்டு நிறுவனங்களின்கீழ் விற்று வந்தார்.
இந்நிலையில், தமது வருமானம் குறித்து தவறான விவரங்களைச் சமர்ப்பித்ததாக 40 வயது சிங்கப்பூரரான பாங் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வர்த்தக ஆவணங்களை வைத்திருக்காததற்கும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மொத்தம் $129,411 மதிப்பிலான வரிப் பணத்தை அவர் செலுத்த வேண்டும் என்றும் அந்தப் பணத்தை அவர் செலுத்தவில்லை என்று சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் தெரிவித்தது.