சிங்கப்பூர் ஆகாயப் படையின் போர்விமானங்கள், இரண்டு மாதப் பயிற்சிக்காக குவாமுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆகாயப் படையின் எஃப்-15எஸ்ஜி, எஃப்-16 ரக போர் விமானங்கள், ஆகியவற்றுடன் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் ஜி550 ரக விமானங்களும் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் ஆகாயப் படை அத்தகவலை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளியிட்டது.
அமெரிக்கத் தீவான குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானத் தளத்துக்கு ஆண், பெண் போர்விமானிகள் சென்றுள்ளதாகவும் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள அவர்கள் வரும் நாட்களில் பயிற்சி பெறுவர் என்றும் ஆகாயப் படை குறிப்பிட்டது.
சிங்கப்பூர் ஆகாயப் படையினர், அமெரிக்கக் கடற்படையின் விஏகியூ132 பிரிவுடனும் பயிற்சி பெறுவார்கள். அந்த கடற்படைப் பிரிவினர் மின்னியல் போர்விமானங்களை இயக்குவதாகக் கூறப்பட்டது. கொவிட்-19 பரவலைக் கருத்தில் கொண்டு மருத்துவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாகவும் ஆகாயப் படை தெரிவித்தது.