கொவிட்-19 கிருமித்தொற்றுகள் கூடியுள்ள நேரத்தில் தனிமை வளாகங்களாக இருந்துவந்த ஹோட்டல்களின் எண்ணிக்கை 70லிருந்து 90க்குக்கு கூடியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் , இந்த ஹோட்டல்கள் ஒரு கட்டத்தில் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தும் வசதிகளாக அல்லது வீட்டில் தங்கும் உத்தரவுக்காக ஒதுக்கப்பட்ட வசதிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய தேவைகளுக்காக இந்த ஹோட்டல்கள் மீண்டும் பயன்படுத்தப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்தது. எத்தனை ஹோட்டல்கள் இதுபோன்ற வசதிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரிவிக்கப்படவில்லை.
சூழல்நிலையைப் பொறுத்து வீட்டில் தங்கும் உத்தரவையோ தனிமை உத்தரவையோ மக்கள் வீட்டிலேயே நிறைவேற்றலாம் என்று அமைச்சு குறிப்பிட்டது.