பள்ளிகளிலும் உயர் கல்வி நிலையங்களிலும் வரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் மீண்டும் தொடரும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாகத் தளர்த்தி வரும் வேளையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் முகக்கவசத்துடனான உள்ளரங்கு, வெளிப்புற நடவடிக்கைகளில் அதிகபட்சம் ஐந்து பேர் கொண்ட குழுக்
களுக்கு அனுமதி வழங்கப்படும்.
மூத்தப் பிரிவுகளைக் கொண்ட உயர்நிலைப்பள்ளிகள், தொடக்கக்கல்லூரிகள், மில்லேனியா கல்விக் கழகம், சிறப்புக் கல்விப் பள்ளிகள் ஆகியவை நேரில் பங்கேற்கப்படும் இணைப்பாட வகுப்பு களை மீண்டும் தொடரலாம். அதிலும் அதிகபட்சம் ஐந்து பேரைக் கொண்ட குழுக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
வெளியிலிருந்து வரும்
பயிற்றுவிப்பாளர்களால் நடத்தப்படும் பயிற்சிகளிலும் பள்ளிக்கு வெளியே நடைபெறும் நிகழ்வு
களிலும் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே ஈடுபடலாம் என்று கல்வி அமைச்சு கூறியது. தொடக்கப்பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிந்தவாறு தங்கள் வகுப்பு நண்பர்களுடன் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். மாணவர்கள் தடுப்பூசி போட்டிருந்
தாலும் இன்னும் போடவில்லை என்றாலும் இந்த விதிமுறைகள் நடப்புக்கு வரும்.