வெளிநாட்டு ஊழியர்களும் பணிப்பெண்களும் நேற்று முன்தினம் மெய்நிகர் தேசிய தின கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
ஒரு மணி நேரம் நீடித்த நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சிகளும் நடனங்களும் இடம்பெற்றன. வெளிநாட்டு ஊழியர் தொடர்புக் கூட்டணி (AGWO) மனிதவள அமைச்சு மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து அதற்கு ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சி அமைப்பின் ஃபேஸ்புக்கிலும் யூடியூப் சேனலிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
"தொற்றுநோய் பல ஊழியர்களைப் பாதித்துள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளால் அவர்கள் நண்பர்களுடன் நேரம் செலவிடுவது குறைந்துள்ளது. இந்நிகழ்வு, அவர் களுக்கு உற்சாகத்தை அளிக்கும் என்று நம்புகிறோம்," என்றார் கூட்டணி அமைப்புகளில் ஒன்றான ஹோப் திட்டத்தைச் சேர்ந்த ரெவரண்ட் எஸக்கியல் டான்.