லிட்டில் இந்தியா வட்டாரத்தில் இரண்டு பங்ளாதேஷ் ஊழியர் களிடம் $300,000 கொள்ளை யடித்த ஐவரில் கடைசி இரண்டு பேரும் குற்றவாளிகள் என நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சட்டவிரோதப் பணம் அனுப்பும் சேவையை வழங்கி வந்த இரு பங்ளாதேஷ் ஊழியர்களிடம் காவல்துறை அதிகாரிகளைப் போல நடித்து ஐவரும் கொள்ளை யடித்துள்ளனர்.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சிங்கப்பூரர்களான முஹமட் ரிட்ஸுவான் முஹமட் யூசோப், 32, தவகுமரன் ராமமூர்த்தி, 37, ஆகிய இருவரும் குற்றவாளி என மாவட்ட நீதிபதி டோ ஹான் லி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
கொள்ளை, வீடு புகுந்து திருடியது போன்ற குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.
இதே கொள்ளையில் ஈடுபட்ட நூர் முஹமட் அஸ்ரில் சஜாலி, 29, ஷங்கர் மகாலிங்கம், 32, ஜுரைமி ஜுப்ரி, 43 ஆகிய மூவரும் இதற்கு முன்பு நடந்த வழக்கில் விசாரிக்கப்பட்டனர்.
சட்டவிரோமாக பணம் அனுப்பும் சேவையை வழங்கிய சிக்டர் சுஜன், 46, அலாம்கிர் முஹமட், 49 ஆகியோரும் மற்றொரு வழக்கில் விசாரிக்கப்பட்டனர்.
சில பங்ளாதேஷ் ஊழியர்கள் சட்டவிரோதமாக பணம் அனுப்பு வதை கவனித்த தவா, 2017 டிசம்பரில் மற்றொருவரைச் சந்தித்து அவர்களிடமிருந்து பணத்தைப் பறிப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
2017 டிசம்பர் 10ஆம் தேதி சக ஊழியர்களிடமிருந்து திரட்டிய பணத்தை இரு பங்ளாதேஷ் ஊழியர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவிருந்தனர்.
டிசம்பர் 11ஆம் தேதி ரோவல் ரோட்டில் உள்ள கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் இரு பங்ளாதேஷ் ஊழியர்களும் தங்கியிருந்தனர். அப்போது கொள்ளயர்கள் உள்ளே புகுந்தனர்.
இருவர் உள்ளே நுழைந்ததாகவும் இருவர் வெளியே காவல் காத்ததாகவும் நீதிமன்ற விசாரணையில் சுஜன் கூறியிருந்தார்.
"தாங்கள் குற்றவியல் விசா ரணைப் பிரிவிலிருந்து வந்திருப்பதாக தவா கூறினார். ரிட்ஸுவான் பின்னர் அறைக்குள் நுழைந்தார். தவா கூறியதை நம்பி நாங்கள் அவர்களிடம் அடையாள அட்டைகளை ஒப்படைத்தோம்.
"ரிட்ஸுவான் அறை முழுவதும் தேடி 300,000 வெள்ளியை எடுத்துக்கொண்டார்," என்று சுஜன் தெரிவித்திருந்தார்.
பின்னர் கொள்ளையர்கள் ஐவரும் காரில் ஏறி சென்றுவிட்ட னர்.
சந்தேகமடைந்த சுஜன், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட இருவருக்கும் அடுத்த மாதம் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.