கண் நோய்களைக் குறைந்த நேரத்தில் கண்டறியும் முறைக்கு நாட்டின் உயரிய தொழில்நுட்ப புத்தாக்க விருது வழங்கப்பட்டுள்ளது.
டிஎல்எஸ் என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு, ஆழ்ந்த கற்றல் முறை, கண்நோய் கண்டறியும் நேரத்தை 30 நிமிடங் களில் இருந்து 8.5 நிமிடங் களுக்கு குறைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற வருடாந்திர டெக்பிளேசர் விருது நிகழ்ச்சியில் மிகவும் நம்பிக்கையளிக்கும் புத்தாக்கப் பிரிவில் அந்தப் புதிய முறைக்கு தங்க விருது வழங்கப் பட்டது. 2021ஆம் ஆண்டின் விருது களுக்கு மொத்தம் 440 நியமனங்கள் செய்யப்பட்டிருந்தன. இது, 2020ஆம் ஆண்டின் 403 நியமனங்களுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடர்பு, தகவல் அமைச்சர் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
உள்ளூர் சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான 'EyRIS' உருவாக்கிய பகுப்பாய்வு முறை கண் களின் புகைப்படங்களை ஆராய்ந்து கண்நோய் பற்றி தகவல்களைத் தெரிவிக்கிறது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய அந்நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவின் மூத்த உதவி தலைவர் ஸ்டீவன் ஆங், 47, வழக்கமாக இத்தகைய நடை முறைக்கு குறைந்தது ஒரு நாள் தேவைப்படும் என்றார்.
"எங்களுடைய தொழில்நுட்பத்தில் படங்களை இணையம் வழியாகவே அனுப்பினால் நோயாளிகளுக்கு 15 முதல் 20 விநாடிகளில் முடிவுகளை அனுப்பி வைப்போம்," என்றும் அவர் தெரிவித்தார்.