சிங்கப்பூரில் வருங்கால வாழ்க்கைச் சூழல் மேலும் அதிகளவில் எல்லாரையும் உள்ளடக்கியதாகவும் பசுமைமிக்கதாகவும் இருக்கவேண்டும் என்று சிங்கப்பூர் இளையர்கள் விரும்புகிறார்கள்.
சக்கர நாற்காலிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்து அதிகமாக வேண்டும்; மேலும் பல இயற்கை பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
புத்தம்புது தொழில்நுட்ப நவீனங்களுடன் எப்போதுமே சிங்கப்பூர் மீட்சித்திறனுடன் திகழ வேண்டும். அதேவேளையில், நினைவுச்சின்னங்களைப் பழமைகெடாமல் பாதுகாத்து அதன்மூலம் பாரம்பரியத்தை சிங்கப்பூர் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றும் இளையர்கள் விரும்புகிறார்கள்.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் நீண்டகால திட்ட மறுபரிசீலனையின் ஒரு பகுதியாக இந்த விருப்பங்கள் தெரியவந்து இருக்கின்றன. இந்தப் பரிசீலனை, தேசிய இளையர் மன்றத்துடன் சேர்ந்து 2021 ஜூலையில் தொடங்கி ஓராண்டு காலம் நடக்கிறது.
இதில் 1,200 இளையர்கள் கலந்துகொண்டு அடுத்த 50 ஆண்டுகளிலும் அதற்கு அப்பாலும் சிங்கப்பூர் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிய தங்களுடைய யோசனைகள், கருத்துகளைத் தெரிவித்து உள்ளனர்.