சிங்கப்பூரில், 2020-ஆம் ஆண்டில் கொவிட்-19 கிருமித்தொற்று உச்சக்கட்டத்தில் இருந்தபோது வேலைசெய்த இளையர்களின் விகிதத்தைவிட சென்ற ஆண்டு அதிகமான இளையர்கள் வேலைகளைப் பெற்றனர்.
மனிதவள அமைச்சு 2021ன்ஆம் ஆண்டின் வேலைச்சந்தை குறித்து மனிதவள அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் அது தெரிவிக்கப்பட்டது.
உள்ளூர் இளையர்களிடையே வேலையின்மை விகிதம் 7.3 விழுக்காடாகக் குறைந்தது. 2020ஆம் அண்டில் அந்த விகிதம் 10.6 விழுக்காடாக இருந்தது.
வேலைவாய்ப்பு அறிக்கை, 15 முதல் 24 வயது வரையிலான சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் உள்ளூர் இளையர்கள் என்று குறிப்பிடுகிறது.
சென்ற ஆண்டு பொருளியல் மீட்சி குறித்த எதிர்பார்ப்புகள் மேம்பட்டன.
இந்நிலையில் பொதுத்துறை, கல்வி, சுகாதாரம், சமூகச் சேவைகள், ஒட்டுமொத்த வர்த்தகம், சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இளையர்களுக்கு வேலைகள் கிடைத்தன.
பொருளியல் மீட்சி அடைந்ததால் கூடுதலான இளையர்கள் வேலைகளைத் தேடிப் பெற்றனர்.