புனித வெள்ளி (ஏப்ரல் 15) அன்று தொடங்கிய வாரயிறுதியில் உட்லண்ட்ஸ் சோதனைச்சவாடியில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தரைவழி பயணங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முழுமையாகத் திறந்த பின்னர் வந்திருக்கும் முதல் பொது விடுமுறை இது.
காலை எட்டு மணிக்கு உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்குத் தான் சென்றபோது வரிசையில் 200 பேர் இருந்தனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
வரிசைகளை ஒழுங்குபடுத்த குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணைய அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
சோதனைச்சாவடி அருகே உள்ள பேருந்து நிறுத்துமிடத்தையும் தாண்டி 100 மீட்டர் தூரம் வரை வரிசை நீண்டிருந்தது.
காலை 9 மணிக்கு மழை பெய்தபோதும் வரிசை குறையவில்லை.
பின்னர் காலை 10 மணிக்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் நண்பகல் 12 மணி அளவில் குறைந்தது.
மழை பெய்தபோதும் ஜோகூர் செல்லும் ஆர்வம் பலரிடம் இருந்தது.
சிலர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா செல்வதாகக் கூறினர்.
மலேசியர்கள் பலரும் வார இறுதியைக் கழிக்க சிங்கப்பூர் நுழைந்த வண்ணம் இருந்தனர்.