பிரதமர் லீ சியன் லூங்க்கு ஜோகூரின்  உயரிய விருது

பிரதமர் லீ சியன் லூங்க்கு ஜோகூர் மாநிலத்தின் ஆக உயரிய விருது வழங்கப்படவுள்ளது. அவரது மனைவி திருவாட்டி ஹோ சிங்க்கு மாநில விருது வழங்கப்படும்.

ஜோகூரில் நாளை நடக்கவிருக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இருவரும் ஜோகூர் மன்னரிடமிருந்து விருதுகப் பெற்றுகொள்வர்.

1984ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் திரு லீ குவான் இயூ, அப்போதைய சட்ட அமைச்சர் இ.டபிள்யூ.பார்க்கர், 1991ல் அப்போதைய பிரதமர் கோ சோங் டோங் ஆகிய மூவருக்கும் இந்த உயரிய மரியாதை வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் லீ, திருவாட்டி ஹோவுடன் வெளியுறவு அமைச்சர் விவி யன் பாலகிருஷ்ணன், உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம், பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோரும் செல்வர்.

அரச மரியாதை செய்யப்பட்ட பிறகு, பிரதமர் லீ மற்றும் திருவாட்டி ஹோ ஆகியோரைக் கௌரவிக்கும் சிறப்பு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!