பிரதமர் லீ சியன் லூங்க்கு ஜோகூர் மாநிலத்தின் ஆக உயரிய விருது வழங்கப்படவுள்ளது. அவரது மனைவி திருவாட்டி ஹோ சிங்க்கு மாநில விருது வழங்கப்படும்.
ஜோகூரில் நாளை நடக்கவிருக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இருவரும் ஜோகூர் மன்னரிடமிருந்து விருதுகப் பெற்றுகொள்வர்.
1984ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் திரு லீ குவான் இயூ, அப்போதைய சட்ட அமைச்சர் இ.டபிள்யூ.பார்க்கர், 1991ல் அப்போதைய பிரதமர் கோ சோங் டோங் ஆகிய மூவருக்கும் இந்த உயரிய மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் லீ, திருவாட்டி ஹோவுடன் வெளியுறவு அமைச்சர் விவி யன் பாலகிருஷ்ணன், உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம், பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோரும் செல்வர்.
அரச மரியாதை செய்யப்பட்ட பிறகு, பிரதமர் லீ மற்றும் திருவாட்டி ஹோ ஆகியோரைக் கௌரவிக்கும் சிறப்பு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.