பத்து நாள் (இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை) மூடலுக்குப் பிறகு கூடுதல் பாதுகாப்புடன் கிளார்க் கீயில் உள்ள 'ஸூக்' இரவுவிடுதி இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.
கொவிட்-19 நெருக்கடி
நிலையை முன்னிட்டு நடை
முறைப்படுத்தப்பட்ட கட்டுப்
பாடுகளை மீறியதற்காக அந்த இரவுவிடுதிக்கு $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, தற்காலிகமாக மூடவும் அதற்கு உத்தரவிடப்பட்டது.
கடந்த மாதம் 23ஆம் தேதியன்று அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கூடுதல் வாடிக்கையாளர்கள் 'ஸூக்' இரவுவிடுதியில் இருந்தனர்.
தற்போது பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளபோதிலும் தொடர்ந்து நடப்பில் இருக்கும் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் 'ஸூக்' இரவுவிடுதியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ஏப்ரல் 23ல் விதிமீறல் ஏற்பட்ட இடத்தில் அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லை என்று 'ஸூக்' நிறு
வனம் தெரிவித்திருந்தது.
தற்போது இரவு நேரங்களில் அதிகபட்சம் 500 பேர் மட்டுமே 'ஸூக்' இரவுவிடுதிக்குள் அனுமதிக்கப்படுவர்.
வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.