பிடோக் தீச் சம்பவத்தில் மாண்ட தந்தை, மகளுக்குப் பிரியாவிடை

பிடோக் நார்த்தில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் மூண்ட தீயில் மாண்ட தந்தை, மகள் ஆகியோருக்குப் பிரியாவிடை கொடுக்க நூற்றுக்கணக்கானோர் கூடினர்.

மலேசியாவின் பாஹாங் மாநிலத்தில் அவர்களது இறுதிச்சடங்கு இடம்பெற்றது. இன்று காலை அவர்களுடைய நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.

மலேசியரான 34 வயது டான் சூன் கியோங், அவரது மூன்று வயது மகள் ஹுய் இன் புளோக் 409 பிடோக் நார்த் அவென்யூ 2ல் உள்ள ஒரு வீட்டில் வாடகை வசித்துவந்தனர்.

மே 13ஆம் தேதி, அந்த வீட்டில் தீ மூண்டது. அதில் முவர் மாண்டனர். வீட்டின் உரிமையாளரான 56 வயதான ஆய்லின் சான்னும் தீச் சம்பவத்தில் உயிரிழந்தார்.

திரு டானின் 34 வயதான மனைவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது குடும்பத்துக்குத் தங்கும் வசதிகளும், ஆதரவும் வழங்கப்பட்டு வருவதாக தேசிய வளர்ச்சி துணையமைச்சரும், ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினருமான டான் கியாட் ஹவ் கூறினார்.

அன்னையர் தினத்தைக் கொண்டாட திரு டான் தமது குடும்பத்துடன் மலேசியாவுக்கு மே 8ஆம் தேதி சென்றததாக சீன நாளிதழான சின் மின் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!