சிங்கப்பூரில் குரங்கம்மைப் பரவல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தேசிய பொதுச் சுகாதார ஆய்வுக்கூடம் தயாராக இருப்பதாக அதன் இயக்குநரான துணைப் பேராசிரியர் ரேமண்ட் லின் உறுதி அளித்துள்ளார்.
தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின்கீழ் இந்த ஆய்வுக்கூடம் செயல்படுகிறது.
குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை அடையாளம் காண பிசிஆர் பரிசோதனை முறைகளை ஆய்வுக்கூடம் தயார்நிலை யில் வைத்துள்ளதாக மூத்த மருத்துவத் தொழில்நுட்ப நிபுணர் நெட்டலின் டாங் கூறினார்.
சிங்கப்பூரில் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு முதல்முறையாக ஒருவருக்குக் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டதை ஆய்வுக்கூடம் பரிசோதனை மூலம் அடையாளம் கண்டது.
"எனது கருத்தின்படி குரங்கம்மை அபாயகரமான நோயல்ல. ஆபத்து விளைவிக்கக்கூடிய சின்னம்மை போல குரங்கம்மை உருவெடுத்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அத்தகைய நிலை ஏற்
படக்கூடாது என வேண்டிக்கொள்கிறோம்," என்று துணைப் பேராசிரியர் லின் கூறினார்.
தேசிய பொதுச் சுகாதார ஆய்வுக்கூடத்துக்கு இரண்டு முக்கிய பொறுப்புகள் உள்ளன.
சமூக அளவில் பாதிப்பை ஏற்
படுத்தி வரும் நோய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதைப் பற்றி தெரிந்துகொள்வது அதில் ஒன்றாகும்.
இதன்மூலம் நிலைமை மோச
மடைந்தாலோ அல்லது கிருமிவகை மாறினாலோ முன்கூட்டியே
எச்சரிக்கை விடுக்கலாம் என்றும் அவ்வாறு செய்தால் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சிங்கப்பூரின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்கு அது உதவும் என்றும் துணைப் பேராசிரியர் லின் கூறினார்.
ஆய்வுக்கூடத்தின் ஊழியர்கள் ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம், வாரத்துக்கு ஐந்து நாள்கள் கிருமிவகைகளை ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.