மின்னிலக்க யுகத்தில் அச்சுப் பிரதி குறித்த மிகைமெய் கண்காட்சி

மின்னிலக்க யுகத்தில் அச்சுப் பிரதி குறித்த மிகைமெய் கண்காட்சி

1 mins read
34b9d4da-7c50-46bf-974f-76edc5e218c3
'த ஸ்டேட் ஆஃப் பிரிண்ட்' எனும் தலைப்பிலான மிகைமெய் கண் காட்சியில் 40க்கும் மேலான வரைகலை வித்தகர்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்து உள்ளனர். படம்: 'டிசைன் சிங்கப்பூர்' மன்றம் -

தேசிய வடி­வ­மைப்பு நிலை­யத்­தில் தற்­போது இடம்­பெ­றும் 'த ஸ்டேட் ஆஃப் பிரிண்ட்' எனும் கண்­காட்சியில் பார்­வை­யா­ளர்­களை ஈர்க்­கும் புத்­தாக்­க­மான இரு­வ­ழித் தொடர்பு தொழில்­நுட்ப அம்­சங்­கள் புகுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த மிகை­மெய் கண்­காட்­சி­யில் அச்சு ஊட­கம் தொடர்­பான உள்­ளூர், வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளின் பல்­வேறு படைப்­பு­கள் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

மின்­னி­லக்­கத் தொழில்நுட்­பம் கோலோச்­சும் யுகத்­தில் அச்­சுப் பிர­தி­க­ளின் தொட்­டு­ண­ரக்­கூ­டிய அம்­சத்தை எடுத்­துக் ­கூ­று­வது இதன் இலக்கு.

வரு­கை­யா­ளர்­க­ளுக்கு தாதிமை இல்­லத்­தில் இருக்­கும் முதி­யோ­ருக்கு வாழ்த்து அட்டை தயா­ரிக்­கும் வாய்ப்பு கிடைக்­கும்.

2020ஆம் ஆண்டு கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­கள் அம­லில் இருந்­த­போது தொடங்­கப்­பட்ட இந்­தக் கண்­காட்சி இப்­போது இரண்­டா­வது முறை­யாக நடை­பெ­று­கிறது.

தேசிய வடி­வ­மைப்பு நிலை­யத்­தில் அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை தின­சரி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்­தக் கண்­காட்­சியை இல­வ­ச­மா­கக் கண்டு களிக்­க­லாம்.