தேசிய வடிவமைப்பு நிலையத்தில் தற்போது இடம்பெறும் 'த ஸ்டேட் ஆஃப் பிரிண்ட்' எனும் கண்காட்சியில் பார்வையாளர்களை ஈர்க்கும் புத்தாக்கமான இருவழித் தொடர்பு தொழில்நுட்ப அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
இந்த மிகைமெய் கண்காட்சியில் அச்சு ஊடகம் தொடர்பான உள்ளூர், வெளிநாட்டு நிறுவனங்களின் பல்வேறு படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மின்னிலக்கத் தொழில்நுட்பம் கோலோச்சும் யுகத்தில் அச்சுப் பிரதிகளின் தொட்டுணரக்கூடிய அம்சத்தை எடுத்துக் கூறுவது இதன் இலக்கு.
வருகையாளர்களுக்கு தாதிமை இல்லத்தில் இருக்கும் முதியோருக்கு வாழ்த்து அட்டை தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
2020ஆம் ஆண்டு கொவிட்-19 கிருமிப்பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் அமலில் இருந்தபோது தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி இப்போது இரண்டாவது முறையாக நடைபெறுகிறது.
தேசிய வடிவமைப்பு நிலையத்தில் அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை தினசரி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தக் கண்காட்சியை இலவசமாகக் கண்டு களிக்கலாம்.