சிங்கப்பூரில் தற்போது கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிப்படைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிய கொவிட்-19 அலை ஏற்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பரவிவரும் பிஏ.4 மற்றும் பிஏ.5 ஓமிக்ரான் கிருமி
வகைகள் முதன்முதலாக இவ்வாண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் தலைதூக்கின. தற்போது இந்தக் கிருமிவகைகள் உலகெங்கும் மிக விரைவாகப் பரவி வருகின்றன.
இந்த கிருமிவகைகள் உருமாறும் தன்மை கொண்டவை என்றும் மிக எளிதில் பரவக்கூடியதாக உள்ளன என்றும் மருத்துவ
நிபுணர்கள் எச்சரித்தனர். மேலும், அவை நோய் எதிர்ப்புசக்தியையும் மீறி பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை என்றும் தெரவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சமூக அளவில் ஏற்பட்ட கிருமிப் பரவலில் 45 விழுக்காட்டினருக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 கிருமிவகைகளால் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு முந்திய வாரத்துடன் ஒப்பிடுகையில் இது 30 விழுக்காடு அதிகம்.
இதற்கு முன்பு பரவிய ஓமிக்ரான் கிருமிவகைகளுடன் ஒப்பிடும்போது கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கும் இந்த இரண்டு கிருமிவகைகளும் எளிதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், இதற்கு முன் பரவிய ஓமிக்ரான் கிருமிவகைகளைவிட இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்று தற்
போதைய தரவுகள் காட்டுகின்றன. இப்புதிய கிருமிவகைகளை எதிர்கொள்ள ஃபைசர், மொடர்னா, நோவாவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிறு
வனங்கள் புதிய தடுப்பூசிகளைச் சோதனையிட்டு வருகின்றன.
பிஏ.4 மற்றும் பிஏ.5 கிருமி
வகைகளிடமிருந்து நம்மையும் நமது அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக்கொள்ள பத்து வழிமுறைகளை மருத்துவ நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
1. முகக்கவசம் அணிதல்
வெளிப்புறங்களில் இல்லாது அலுவலகம், பள்ளி, மின்தூக்கி, பேருந்து, எம்ஆர்டி ரயில் போன்ற இடங்களில் இருக்கும்போது முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும்.
2. நோய்வாய்ப்பட்டால் பிறருடன் நேருக்கு நேர் தொடர்பு
கொள்வதைத் தவிர்க்கவும்
உடல்நலம் பாதிப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்றவர்களை நேருக்கு நேர் சந்திப்பதை, அவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்த்திட வேண்டும். கொவிட்-19 பரிசோதனை செய்து கிருமித்தொற்று ஏற்பட வில்லை என்று முடிவுகள் தெரிவித்தாலும் மற்றவர்கள் அருகில் செல்லாமல் இருப்பது நல்லது.
3. சுத்தம் சுகம் தரும்
கைகளை அடிக்கடி சவர்க்
காரம் பயன்படுத்திக் கழுவ வேண்டும். அத்துடன் சுத்தமாக இருக்க வேண்டும்.
4. ஏஆர்டி கருவிகளைக் கொண்டு சுயப் பரிசோதனை செய்ய
வேண்டும்
ஏண்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) கருவிகளைப் பயன்படுத்தி அடிக்கடி சுயப் பரிசோதனை செய்துகொள்வது
நல்லது. குறிப்பாக, உடல்நலம்
இல்லாதபோது அல்லது எளிதில் பாதிப்படைவோரைச் சந்திப்பதற்கு முன்பு அவ்வாறு செய்துகொள்ள பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இம்மாதம் 18ஆம் தேதியிலிருந்து சிங்போஸ்ட் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் பத்து ஏஆர்டி கருவிகள் விநியோகிக்கப்படும்.
5. கொவிட்-19 அறிகுறி இருந்தால் தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்ளவும்
கொவிட்-19 அறிகுறிகள் இருந்தும் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று பரிசோதனை முடிவுகள் காட்டினாலும் ஏஆர்டி கருவிகளைப் பயன்படுத்தி தொடர்ந்து சுயப் பரிசோதனை செய்துக்கொள்ளவும்.
6. பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்
நீங்கள் இன்னும் பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவராக இருந்தால் அதை உடனடியாகப் போட்டுக்கொள்ளவும். குறிப்பாக, 60
வயதும் அதற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள
வேண்டும்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களும் கூடுதல் தடுப்பூசி
போட்டுக்கொள்ள வேண்டும். கிருமித்தொற்று ஏற்பட்டு குறைந்தது 28 நாள்கள் கழித்து, கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள
வேண்டும்.
7. இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிபோட்டுக்கொள்ள வேண்டும்
80 வயதும் அதற்கும் மேற்பட்டோர், முதியோர் இல்லத்தில் வசிப்போர், 18 வயதும் அதற்கும் மேற்பட்டோராக இருந்து மருத்துவ ரீதியாக எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள் ஆகியோர் முதலாவது கூடுதல் ஊசி போட்டு ஏறத்தாழ ஐந்து மாதங்கள் கழித்து இரண்டாவது கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
8. உடல் ஆரோக்கியத்தைக்
கண்காணிக்கவும்
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பு சுயப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
9. உச்சவேளைகளில் பொதுப் போக்குவரத்தில் பயணம்
செய்வதைத் தவிர்க்கவும்
காலை, மாலை உச்சவேளை
களின்போது பொதுப் போக்கு
வரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அத்தகைய சூழல்களில்
பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கூட்டம் அதிகமில்லா நேரங்களில் பயணம் செய்வது நன்று.
10. பேருந்து, எம்ஆர்டி ரயில்களில் பயணம் செய்யும்போது பேசுவதைத் தவிர்க்கவும்
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பேருந்து, ரயில்கள் ஆகியவற்றில் பயணம் செய்பவர்கள் பேசும்போது அவர்
களிடமிருந்து வெளியேறும் சுவாச நீர்த்துளிகள் மூலம் கொவிட்-19 கிருமி பரவக்கூடும்.