‘செக்காம்’ எனப்படும் காவல்துறை பாதுகாப்புப் படையின் முதன்மையான பணி சிங்கப்பூர் மற்றும் வெளி நாட்டு அரசியல் பிரமுகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.
தேசிய தின அணிவகுப்பு, அரசியல் தலைவர்களின் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களை இந்தப் படையினர் முழுமையாகச் சோதனையிடுவர்.
சோதனைகளில் ஈடுபடும்போது நிலத்தடிச் சுரங்கங்கள், கால்வாய்கள் போன்றவற்றில் நீண்டநேரம் பணிபுரிய வேண்டியுள்ளதால் உடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வாயுக்களை அவர்கள் சுவாசிக்க வாய்ப்புள்ளது.
அத்துடன், உயர்கட்டட மாடி
களிலும் குளிரூட்டி குழாய்களின் மேல்புறம் போன்ற பகுதிகளிலும் சோதனையில் ஈடுபடும்போது அங்கிருந்து கீழே விழும் அபாயமும் உள்ளதென படையினர் கூறுகின்ற னர்.
இத்தகைய அசம்பாவிதங்களைத் தடுக்க ‘ரிமோட் கண்ட்ரோல்’ வாகனங்கள், ‘டிரோன்கள்’ ஆகிய தொழில்நுட்பக் கருவிகளை காவல்துறை பாதுகாப்புப் படை பயன்படுத்தி வருகிறது.
இந்தக் கருவிகள் பயன்படுத்தப் படும் விதம் கடந்த வியாழக்கிழமை தோ பாயோவில் உள்ள காவல் துறை பாதுகாப்புப் படை நிலை யத்தில் செய்து காண்பிக்கப்பட்டது.
காவலர்கள் ஓரிடத்தைச் சோதனையிடுவதற்கு முன், அங்கு ஏதேனும் சந்தேகத்திற்குரிய பொருள்கள் இருக்கின்றனவா என இக்
கருவிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் புகைப்படக் கருவிகளின் வழி கண்டறிவர்.
இதனால், சோதனைப் பணி
களின் நேரம் 50 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்துள்ளதாக இப்
படையின் தலைமை அதிகாரியும் காவல் துறை துணை கண்காணிப்பாளருமான வின்ஸ்டன் யிம் கூறினார்.
‘ரிமோட் கண்ட்ரோல்’ வாகனங் களின் பயன்பாடு சற்று நிபுணத்துவம் வாய்ந்தது என்பதால், அதன் திறன்களைத் தொடர்ந்து மேம்
படுத்த முயன்று வருவதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
உள்துறைக் குழுவின் அறி
வியல், தொழில்நுட்ப அமைப்புடன் இணைந்து இதுபோன்ற தொழில்நுட்பக் கருவிகளின் வழி காவல் துறை பாதுகாப்புப் படையினரின் பணிச்சுமையைக் குறைக்க முனை வதோடு அவர்களது பாதுகாப்பையும் ‘செக்காம்’ உறுதி செய்ய முயல்கிறது.