தொடர்புத்திறன் குறைபாடு, கற்றல் குறைபாடு போன்றவற்றை எதிர்நோக்கும் சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் பல்கலைக் கழகக் கல்விக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள சிரமப்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். சிறப்புத் தேவையுடைய தொடக்கநிலை, உயர்நிலை மாணவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவு உயர் கல்வி மேற்கொள்வோருக்குக் கிடைப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரத்தை வகுத்துக்கொண்டு செயல்படுவது, முக்கியமான நடவடிக்கைகளுக்குக் கூடுதல் நேரம் செலவிடுவது போன்ற உயர் கல்விக்கு மிகவும் அவசியமான திறன்களில் சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் சவால்களை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது.
சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கான பள்ளிகளில் அவர்களை வேலைக்குத் தயார் செய்வதற்கான புதிய கல்வித் திட்டத்தைக் கல்வி அமைச்சு சென்ற மாதம் தொடங்கியது. இது உட்பட சில ஆதரவுத் திட்டங்கள் நடப்பில் உள்ளன.
எனினும், அவர்களுக்கு மேலும் ஆதரவு வழங்க முயற்சிகள் எடுக்கப்படலாம் என வல்லுநர்களும் மாணவர்களும் கூறுகின்றனர்.