சிறுமியை மானபங்கம் செய்த குற்றத்துக்காக 60 வயது ஆடவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் புரிந்தவர் 50 வயதுக்கும் மேற்பட்டவர் என்பதால் அவருக்குப் பிரம்படி விதிக்க முடியாது.
2016, 2019ஆம் ஆண்டுகளில் அச்சிறுமியை அந்த ஆடவர் மானபங்கம் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அச்சிறுமி அந்த ஆடவரின் மனைவியின் வீட்டில் துணைப்பாட வகுப்புகளுக்காகச் சென்றுகொண்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைக் காக்க குற்றம் புரிந்த ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தீர்ப்புக்கு எதிராக அந்த ஆடவர் மேல்முறையீடு செய்யப்போவதாக அறியப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அந்த ஆடவர் மற்றும் அவரது மனைவியின் நெருங்கிய நண்பர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அந்தச் சிறுமி மூன்று வயதாக இருந்தபோதே அந்த ஆடவருக்கு அவரைத் தெரியும்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சகோதரர்கள் இருக்கின்றனர். ஆனால் அந்த ஆடவர் அச்சிறுமி யிடம் மட்டுமே நெருங்கிப்
பழகியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறுமியின் பிறந்தநாளுக்கும் அவர் தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றபோதும் அந்த ஆடவர் பரிசுகள் வாங்கித் தந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்
பட்டது. தமது தங்கையையும் அந்த ஆடவர் மானபங்கம் செய்து விடுவார் என்று சிறுமிக்கு
அச்சம் ஏற்பட்டதை அடுத்து, பள்ளி ஆலோசகரிடம் இது
குறித்து அவர் மனந்திறந்ததை அடுத்து, ஆடவர் புரிந்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.