அனுஷா செல்வமணி
பொன்மணி உதயகுமார்
கைப்பாவைகளின் மூலமும் நிழற்பட பொம்மலாட்ட வடிவிலும் பிள்ளைகளுக்குத் தமிழ்க் கதைகளைக் கொண்டு சேர்த்துவரும் 46 வயது திருமதி கேசவன் பிந்து, நேற்று நடைபெற்ற தாய்மொழி கருத்தரங்களில் கௌரவிக்கப்பட்டார். கடந்த 14 ஆண்டு களாக இத்துறையில் பணியாற்றும் அவர், தொழில்நுட்பம் மூலமாகப் பிள்ளைகளின் தமிழ்க் கற்றலுக்குப் பங்களிக்க விரும்புகிறார்.
விருது பெற்ற மற்றுமொரு தமிழாசிரியர் திருமதி பத்மாவதி குப்புசாமி, 52, இதற்கு முன்பு
ஆங்கிலமொழி ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
தமிழ்த் துறையில் பணிபுரிய வேண்டுமென்ற ஆர்வத்தில் இத்துறைக்கு மாறினார். 'மகிழ்வூட்டும் கற்றல்' எனும் உத்தியை பின்பற்றும் திருமதி பத்மாவதி, மாணவர்களின் தமிழ் கற்றலை வகுப்பறையில் மட்டும் நிறுத்தாமல் விளையாட்டு மூலமாக வெளிச் சூழல்களுக்கும் கொண்டு செல்கிறார். எட்டு ஆண்டுகளாகப் பாலர் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் 40 வயது திருமதி நஸ்ரீன் பானு சூராலி ஹபீப் முகமது, விருது பெற்ற தமிழாசிரியர்களில் மற்றொருவர்.
பிள்ளைகளுக்குப் பாடல் மூலம் தமிழ்மொழி கற்பிக்கும் இவர், பாடங்களுக்கான வளங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றால், தாமே மாணவர்களுக்குப் பாடல்களும் புத்தகங்களும் எழுதுவார்.
தமிழ் மொழி கற்றலை எவ்வாறு பிள்ளைகளுக்கு சுவையான தாக்கலாம் என நேற்று பகிர்ந்துகொள்ளப்பட்டது. தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழி சேவைப்பிரிவின் துணை நூலகரான குமாரி சைனப், கதை சொல்லும் பகிர்வரங்கத்தில் மெய்நிகர் வழியாக பிரேமா கோவிந்த் எழுதிய 'மாதுளம் யாருக்கு' என்ற புத்தகத்தை சுவாரசியமான முறையில் படித்துக் காட்டினார். கதை வழி மொழி வளம், சிந்தனை வளம், போன்றவற்றை வளர்க்க லாம் என்று இவர் கூறுகிறார்.
நடிகரும் தொகுப்பாளருமான திரு ஜெயகணேஷ்
ஈஸ்வரன் தன் இரு மகன்களுக்கும் தாம் தமிழ் கற்றுத்தரும் வழிமுறைகளைக் காணொளிகள் மூலம் பங்கேற்
பாளர்களிடம் காண்பித்தார்.
திரைப்பட பாடல்கள், படங்கள், வசனங்கள் போன்றவற்றை பயன்படுத்தியும் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கலாம் என்பதை அவர் சுட்டிகாட்டினார்.
பாலர் பள்ளி தமிழாசிரியர்
களுக்கான பகிர்வு அரங்கத்தில் தேசிய கல்விக் கழகத்தின் மூத்த கற்பித்தல் ஆய்வாளரான திருவாட்டி குணவதியம்மாள் பாலர் பள்ளிகளில் எந்த வகையான நட
வடிக்கைகளை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யலாம் என்பதை விளக்கினார். தனக்குள் இருக்கும் குழந்தையை பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் போது வெளிக்கொணரும்படி அவர் ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார்.
செய்தித்தாள்களில் வரும் செய்திகளைக் கொண்டு பிள்ளைகளிடம் உரையாடல்களை வளர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.