தாமான் பெர்மடாவிலிருந்து அப்பர் தாம்சன் சாலை வரை நீண்டிருக்கும் படிக்கட்டுகளில் அவ்வட்டாரத்தில் இருந்த கடந்தகால அடையாளங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. யிவ் லியான் பூங்கா குடியிருப்பாளர் சங்கத்தின் சமூகத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி இடம்பெறுகிறது. பீஷான்- தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சீ ஹொங் டாட் நேற்று இந்த ஓவியப் படிக்கட்டுகளை திறந்துவைத்தார். இம்பீரியல் வெளிப்புற திரையரங்கு உள்ளிட்ட முக்கிய இடங்களின் படங்களை ஓவியர் முஹமட் இஸ்டியும் யிவ் லியான் பூங்கா குடியிருப்பாளர்களும் ஓவியமாக தீட்டியுள்ளனர்.
இந்தத் திட்டம் நிறைவேற இரண்டு மாதங்கள் ஆனது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்