தரவு நிலையங்களில் வேலை செய்ய ஆர்வம் காட்டும் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் இருந்து பயிற்சியையும் உபகாரச் சம்பளத்தையும் பெறலாம்.
பயிற்சிக்குப் பின்னர் அந்த நிறுவனத்தில் முழுநேர வேலைவாய்ப்புப் பெறுவதற்கான சாத்தியமும் உள்ளது.
தொழில்நுட்பக் கல்விக்கழகத்தின் வேலை ஆய்வு பட்டயம் பெற தரவு நிலையத்தில் ஆர்வத்துடன் பயிற்சி பெறும் கிட்டத்தட்ட 20 மாணவர்களுக்கு மைக்ரோசாஃப்ட் கல்வி உபகாரச் சம்பளத்தை வழங்கும்.
படிப்பு முடிந்த பின்னர் மைக்ரோசாஃப்டில் வேலையில் சேர இவர்களில் சில மாணவர்கள் நேர்காணலுக்குத் தேர்ந்து எடுக்கப்
படுவார்கள் என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட்டும் அதன் பங்காளிகள் மற்றும் வாடிக்கையாளர்களும் சேர்ந்து சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டுக்குள் 86,000 புதிய வேலைகளை உருவாக்குவார்கள்.
இவற்றில் 50,000 வேலைகள் கணினித் தொழில்நுட்பத் திறன் வேலைகள் என்றும் அது தெரிவித்தது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தொழில்நுட்பக் கல்விக் கழகத்
துடன் இணைந்து சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை ஆசியாவின் முதல் தரவுநிலையக் கல்வி நிலையத்தைத் தொடங்கியது.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கிட்டத்தட்ட 300 மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது இந்தக் கல்வி நிலையத்தின் திட்டம்.
கணினிக் கட்டமைப்புகளுக்கான கட்டடங்களாகவும் வெளிப்புறங்களாகவும் தரவு நிலையங்கள் அமையும்.
மைக்ரோசாஃப்ட்டில் வேலையைத் தொடங்கும் முன்னர் தனித்துவத் திறன்களுக்கான பயிற்சியை அவர்கள் பெறுவார்கள்.
தரவு நிலையம் என்பது விரைவாக வளர்ந்துவரும் தொழில் என்று தொழில்நுட்பக் கல்விக் கழகத் தலைமை நிர்வாக அதிகாரி லோ கா கெக் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ஃட்டுனான கூட்டு, இங்கு பயிற்சி பெறுவோரை இந்தத் தொழில்துறையின் முன்னோடிகளாக்க கைகொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் 70க்கும் மேற்பட்ட தரவு நிலையஙகள் செயல்படுவதாக அமெரிக்க அரசாங்க முகவையான இண்டர்நேஷனல் டிரேட் என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.
கூகல், அமேசான், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஐபிஎம் போன்றவை நடத்தும் தரவு நிலையங்கள் அவை என்றும் அது குறிப்பிட்டது.
புதிய தரவு நிலைய கல்விக்கழகம் தரவு நிலையத் திறன்களுக்குப் பயிற்சி அளிப்பதோடு நேரடிப் பயிற்சிக்கான கற்றல் மையத்தையும் அமைக்கும்.
வழிகாட்டுதல்களையும் நிபுணத்துவ மேம்பாட்டு வளங்களையும் இக்கல்விக் கழகம் வழங்கும்.
மீள்திறனையும் வருங்கால சிங்கப்பூருக்கான மின்னிலக்கத்தை உள்ளடக்கிய முறையையும்
உருவாக்குவதன் மூலம் பயிற்சிக்கும் வேலைத்திறனுக்கும் இடையில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப முடி யும் என்று மைக்ரோசாஃப்ட் சிங்கப்பூர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லீ ஹுயி லி தெரிவித்துள்ளார்.