சிங்டெலின் தரவு நிலையங்கள் டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி, ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் ஆகிய வங்கிகளிடமிருந்து $535 மில்லியன் மதிப்புடைய ஐந்து ஆண்டுகால பசுமைக்கடனைப் பெற்றுள்ளன.
அந்த வங்கிகள் பசுமைக்கடன் ஒருங்கிணைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளன.
சிங்டெல் பெற்றுள்ள முதல் பசுமைக்கடன் இதுவாகும் என அந்நிறுவனம் திங்கட்கிழமை தெரிவித்தது.
சிங்டெலின் இரு தரவு நிலையங்களான டிசி வெஸ்ட் மற்றும் டிசி கிம் சுவானின் செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.
பசுமைக்கடன் தகுதிக்கூற்றின் ஒரு பகுதியாக, இரு தரவு நிலையங்களும் கட்டட, கட்டுமான ஆணையத்திடம் இருந்து குறைந்தது ‘கிரீன் மார்க் கோல்ட்பிளஸ்’ சான்றைப் பெற வேண்டும்.
இரு நிலையங்களும் ‘கிரீன் மார்க் பிளாட்டினம்’ சான்றை ஏற்கெனவே பெற்றுள்ளன.