கையூட்டு: இருவருக்கு அபராதம்

கையூட்டு பெற்றுக்கொண்டு ஒரு தொழில் நிறுவனத்திற்கு உதவ திட்டம் வகுத்த இருவருக்கு செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 12) மொத்தம் $18,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மோ ஜுன் ஹாவ், 45, என்ற ஆடவர், குற்றமிழைத்தபோது ‘எஸ்ஆர்எஸ்’ என்ற பாதுகாப்பு ஒலிப்பான் சேவை வழங்கும் நிறுவனத்தில் விற்பனை ஆலோசகராகப் பணியாற்றி வந்தார். தன்மீதான இரண்டு கையூட்டுக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அவருக்கு $12,000 அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்படுமுன் அவர் மீதான மேலும் நான்கு குற்றச்சாட்டுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

ஃபெய் சியோங் உணவு மேலாண்மை நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப நிர்வாகியாகப் பணியாற்றிய பெஞ்சமின் டிங் பெங் லின், 35, என்ற ஆடவர், தன்மீதான ஒரு கையூட்டுக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருக்கு நீதிமன்றம் $6,000 அபராதம் விதித்தது.

எஸ்ஆர்எஸ் நிறுவனத்திடமிருந்து லஞ்சமாகப் பெற்ற $4,526.95 பணத்தையும் தண்டமாக அவர் செலுத்த உத்தரவிடப்பட்டது.

முன்னதாக, திங்கட்கிழமையன்று (மார்ச் 11) எஸ்ஆர்எஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் இயக்குநருமான டான் ஹான் லியோங், 45, தன்மீதான கையூட்டுக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருக்கு $6,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இன்னொரு கையூட்டுக் குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்ட டானுக்கு, ஒட்டுமொத்தத்தில் $33,000 அபராதமாக விதிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!