சியாட்டில்: கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டிகளில் நேற்று அதிகாலை எக்வடோரை எதிர்கொண்ட அமெரிக்கா, கிளின்ட் டெம்சி முயற்சியில் 2=1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. இதில் தொடர்ந்து மூன்றாவது ஆட்டத்தில் கிளின்ட் டெம்சி கோல் போட்டதோடு மட்டுமல் லாது பிற்பாதி ஆட்டத்தில் சக வீரர் கியாசி ஸார்டெஸ் கோல் போட உதவியாக பந்தை அவரு டைய பாதையில் தட்டிக் கொடுத் தார். இதன்மூலம் தென்னமெரிக்கா வில் தனது வடக்குப் பகுதியில் அல்லாத தென்னமெரிக்க நாடு ஒன்றை அமெரிக்கா வென்றுள்ளது இதுவே இரண்டாவது முறை என்று செய்தித் தகவல்கள் கூறு கின்றன. இனி எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று ஹூஸ்டன் நகரில் அர்ஜெண்டினாவையோ வெனிசுவேலாவையோ அமெரிக்க அணி சந்திக்கும். நேற்றைய ஆட்டத்தில் இரண் டாம் பாதியின் தொடக்கத்திலேயே எக்வடோரின் அன்டோனியோ வெலன்சியாவும் அமெரிக்க மத்திய திடல் வீரரான ஜெர்மைன் ஜோன்சும் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்க வீரரான ஜெர்மைன் ஜோன்ஸ் மற்ற இரு அமெரிக்க வீரர்களான அலியாண்டிரோ பெடோயோ, போபி உட் ஆகியோருடன் தப்பாட்டம் காரணமாக இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று அரையிறுதி ஆட்டத்தில் விளையாடும் தகுதியை இழந்துள் ளார். எக்வடோருக்கு எதிரான ஆட்டத்தின் 22ஆம் நிமிடத்தில் கோல் போட்ட கிளின்ட் டெம்சி, பின்னர் 65ஆம் நிமிடத்தில் இரண்டாம் கோல் போடுவதற்கும் உதவினார். இதைத் தொடர்ந்து எக்வடோர் சார்பாக மைக்கல் அரோயோ கோல் போட, என்னர் வெலன்சியா கோல் போடுவதற்கு தமக்குக் கிடைத்த இரண்டு பொன்னான வாய்ப்புகளை வீணடித்தார்.
கோப்பா அமெரிக்கா காற்பந்துத் தொடரில் எக்வடோருக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் முதல் கோலை முட்டும் கிளின்ட் டெம்சி (இடது). படம்: யுஎஸ்ஏ டுடே ஸ்போர்ட்ஸ்